www.womanofislam.com

Muslim women's online learning centre

உம்மதே முஹம்மதியா மீது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கவலை

​ஒரு சமயம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தார்கள்.


​​அப்போது பேரர் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உதட்டிலும் இன்னொரு பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள்.


ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த விசயத்தை தன் தாயார் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள்.


​உடனே பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தந்தையான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்து "நாயகமே பேரர்களைமுத்தமிட்ட விசயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள்.” என்று கேட்டார்கள்.


​அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், என் அருமை மகளே! இவர்கள் பெரியவர்களான பின்பு ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார். அதனால்தான் உதட்டில் முத்தமிட்டேன். இளையவர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் கழுத்தில் முத்தமிட்டேன் என்று மனம்கலங்க விளக்கமளித்தார்கள்.


​இச்செய்தியை கேட்ட அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண் கலங்கினார்கள். அப்போது பாத்திமா நாயகி, என் அருமை தந்தையே! யா ரஸுலல்லாஹ்! ஒவ்வொரு இறைதூதருக்கும் ஒரு விசேசமான ஒரு பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளான். உங்களுக்கும் அந்த விசேச பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே அதை பயன்படுத்தி உங்கள் அன்பு பேரக்குழந்தைகளை இக்கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடாதா...? கண்ணீர் மல்க என்று கேட்டார்கள்.


​அதற்கு எம் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா.???


​எனக்கு வழங்கப்பட்ட அந்த விஷேச பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்தினரின் நலனுக்காக பயன்படுத்துவேன். அதை எனது பேரக்குழந்தைக்காக இங்கு பயன்படுத்த முடியாது என்று கூறினார்கள்.


​ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விஷேச பிரார்த்தனை உண்டு. எனக்குவழங்கப்பட்ட அந்த விஷேச பிரார்த்தனையை மறுமையில் என் சமூகத்திற்கு பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தி வைத்திருக்கிறேன் என்று கூறிய செய்தி புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


எம் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நம் மீது எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார்கள் பார்த்தீர்களா? ஆனால் நாமோ நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை சாதாரண மனிதர் என்றும், அன்னவர்களின் குடும்பத்தாரை இழிவாக பேசி நன்றி கெட்ட உம்மதாக இருக்கிறோம். வல்ல அல்லாஹ் நம்மை நம் இறுதி மூச்சு உள்ளவரை எம் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அன்னாரின் பரிசுத்த குடும்பத்தர்களையும் நேசித்து அவர்கள் வழியில் நடக்க அருள் புரிவானாக ஆமீன்!!







இது போன்ற சுவையான, அரிய இஸ்லாமிய கதைகளை வாசிக்க கீழே உள்ள லிங்குகளை அழுத்துங்கள்


தோள் கொடுத்த

தூய நபி ﷺ

அன்னவர்கள்

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்

சிந்திய உணவு 

பொறுமையில் முன்மாதிரி