மீன் குருமா
தேவையான பொருட்கள்:-
மீன் துண்டுகள்- 300 கிராம்
உருளைக்கிழங்கு - சிறியது 2
பச்சை மிளகாய் -2
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி -2
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 +2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 +1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் 3 டேபிள்ஸ்பூன் + முந்திரிபருப்பு 4 -அரைக்கவும்.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடிகட்டவும். மீனுடன் மஞ்சள் தூள் கால்டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரைடீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து விரவி அரை மணி நேரம் வைக்கவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு நன்கு வேகும் படி மீனை பொரித்து எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போடவும்,வெடிக்கும் பொழுது கருவேப்பிலை பச்சை மிளகாய் போடவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும், இஞ்சி பூண்டு சேர்க்கவும்.வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்க்கவும், சிறிது உப்பு சேர்க்கவும். மூடி போட்டு சிறிது வதங்க விடவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். நன்கு ஒரு சேர வதக்கவும். ஒரு கப் - ஒன்னரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கவும். நறுக்கிய வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும்.
அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
நறுக்கிய மல்லி, புதினா சேர்க்கவும். உருளைக்கிழங்கு குருமா ரெடி.
ரெடியான குருமாவில் பொரித்த மீனை போடவும். உப்பு சரிபார்க்கவும். சேர்ந்து கொதிக்கட்டும்.
அடுப்பில் சிறு தீயில் இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை அணைக்கவும். பரிமாறவும்.