www.womanofislam.com

Muslim women's online learning centre

செட்டிநாடு மட்டன் பிரியாணி


தேவையான பொருட்கள்:-


பாஸ்மதி - 4 கப்

அரிந்த வெங்காயம் - 2

அரிந்த தக்காளி - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

தயிர் - 1/2 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு






மட்டனில் வேகவைக்க:

மட்டன் - 1/2 கிலோ

வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு


அரைக்க:

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10

சோம்பு - 1 டீஸ்பூன்

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

இஞ்சி - 1 சிறுதுண்டு

புதினா - 1 கைப்பிடி


தாளிக்க:

பிரியாணி இலை - 2

கிராம்பு - 3

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 2

சோம்பு - 1 டீஸ்பூன்



செய்முறை:


குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு சிரிது உப்பு+ 1 1/2 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.


அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.


கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை தனியாகவும்,தண்ணியை அளந்து வைக்கவும்.


குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+கறிவேப்பிலை+அரைத்த மசாலா+தக்காளி+மட்டன்+தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் வைக்கவேண்டும்.மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன் மீதி அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு+புதினா சேர்க்கவும்.


தண்ணீர் கொதிக்கும் போது அரிசி சேர்த்து ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.


ஆறியதும் மல்லித்தழை தூவி ராய்த்தாவுடன் பரிமாறவும்.