குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுக்கம் - தொடர் 5
♣ ஸலாம் சொல்லுதல் சம்பந்தமான ஒழுங்கு முறைகள்
1. ஸலாம் சொல்லுவது முக்கியமான ஒரு சுன்னத்தாகும்.
2. ஒருவரை சந்திக்கும்போதும், அவரை விட்டு விடை பெறும்போதும் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள்.
3. ஸலாம் சொல்லுவது சுன்னத்தாக ஒன்றுதான், எனினும். அதற்கு பதில் சொல்லுவது பர்ளு (கடமை) என்பதை மறந்துவிடாதீர்கள்.
4. பெரியவர்கள் சிறியவர்களுக்கும், நிற்பவர்கள் இருப்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்கள் கீழுள்ளவர்களுக்கும், சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் சொல்வது சுன்னத்தாகும்.
♣ பள்ளிவாசலுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் சுன்னத்துகளும்
1. பள்ளிவாசலில் நுழையும்போது வலது காலை உள்வைத்து பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்:
அல்லாஹும்மக்பிர்லி வfப்தஹ் லி அப்வாப ரஹ்மதிக்க
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹஸன் அவர்களது தாய் மூலமும் அவர்களது பாட்டன் மூலமும்.
ஆதாரம்: இப்னு ஸனீ
2. பள்ளியினுள் நுழைந்தபின் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள் யாரும் இல்லாவிட்டாலும் மலக்குமாராவது இருப்பார்கள். அதற்காக "அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹி ஸாலிஹீன்" என்று கூறுங்கள்.
3. இஃதிகாபுடைய நிய்யத்தை "நவைத்துல் இஃதிகாப fபீ ஆதல் மஸ்ஜிதி மா தும்து பீஹி" என்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்படி இஃதிகாப் நிய்யத் வைத்து கொண்டால், அந்த பள்ளியில் இருந்து திரும்பி வரும்வரை நன்மை எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். எந்த நன்மையான காரியமும் செய்யாவிட்டாலும் சரியே.
4. பள்ளியின் காணிக்கையாக இரண்டு ரக்அத்து தொழுது கொள்ளுங்கள்.
5. பள்ளியினுள் உலகம் சம்பந்தமான எந்த ஒரு விடயத்தையும் பேசவேண்டாம்.
6. அதனுள் யாராவது தொலைந்த பொருட்களைத் தேடினால் "லா ரதல்லாஹு அலைக்க" (அல்லாஹ் உனக்கு அதை மீட்டித் தராமல் இருப்பானாக) என்று ஓதுங்கள். அதனுள் விற்பவர்களையோ வாங்குபவர்களையோ கண்டால் "லா அர்பஹல்லாஹு திஜாரதக" என்பதை ஓதிக்கொள்ளுங்கள். (அதாவது அல்லாஹ் உன்னுடைய வியாபாரத்தில் இலாபத்தைத் தராமல் இருப்பானாக)
7. வெளியில் வரும்போது இடது காலை வைத்து கீழ்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்.
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலூக மின் fபல்லிக
அறிவிப்பவர்: அபூ ஹமீத், அபூ உஸைத்
ஆதாரம்: முஸ்லிம்
♣ பிரயாணத்தின்போது கவனிக்கவேண்டிய சுன்னத்தான முறைகள்
1. பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக்அத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக்அத்தில் "குல் யா அய்யு அல் காபிரூன்" சூராவும் இரண்டாவது ரக்அத்தில் "குல் ஹுவல்லாஹு அஹத்" சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.
2. தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷியையும், லி ஈலாபி குரைஷி சூராவையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத்தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.
3. நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.
அல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு
4. வீட்டில் இருந்து வெளியேறும் போது
பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி
ஆதாரம்: திர்மிதி
5. வாகனத்தில் செல்லும் போது
ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன வயின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்
அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூ தாவுத்