www.womanofislam.com

Muslim women's online learning centre

திக்ர்


ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.

(நூல்:திர்மிதீ)



அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு

என்று யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பிய வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.

(நூல்:முஸ்லிம்)



லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.

(நூல்:முஸ்லிம்)


லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்:புகாரி)



சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)



லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலைஹிசலாம்) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்:புகாரி)



சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி. (பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) இந்த இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (நூல்:புகாரி)


சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஹிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று நான் கூறுவது சூரியன் உதயமாகும் இவ்வுலகத்தை விட எனக்கு மிகவும் பிரியமானதாகும் என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)


♦நாங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)


லா ஹவ்ல வலா கூவத்த இல்லா பில்லாஹ் - அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சொர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா? என கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்கள். அப்போது நாயகம், “இந்த முறையில் கூறுவீராக” என கூறினார்கள்.


தமிழ் பகுதி  -  திக்ர்