நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பொன்மொழிகள் - ஒவ்வொரு தலைப்புகளில்
♣ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களை எங்கள் உயிரை விடவும் நேசிப்போம்
♣ சிறந்த செல்வம்
♣ திருமணம் முடிக்கப்படும் நோக்கங்களில் சிறந்தது
♣ தந்தை பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு
♣ பெண் குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள்
♣ உங்களின் (பெற்றோரின்) கடமை
♣ பெண்களை நல்ல முறையில் நடத்துவோம்
♣ உறவுகளை பேணுவோம்
♣ சுவர்க்கம் செல்லும் வழி - பெற்றோர்களை பேணுவோம்
♣ இரகசியம்
♣ நாணம்
♣ இஸ்லாம் வழங்கும் பெண் உரிமை - திருமணம்
♣ கண்ணேறு
♣ பட்டினி
♣ சூரா கஃபின் சிறப்பு
♣ அன்பு
♣ இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
♣ அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்
♣ வெற்றியை தேடி தரும் நான்கு பண்புகள்
♣ அண்ணல் நபியின் ﷺ திருமுடியின் சிறப்பு
♣ நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ﷺ
♣ தாயின் காலடியில் சுவனம் உண்டு
♣ கஸ்தூரி மணம் கமிழும் பூமான் நபி ﷺ
♣ பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்போம்
♣ நல்லறிவு
♣ உங்கள் உள்ளங்களை அழகுபடுத்திக்கொள்ளுங்கள்.
♣ இறையடியார்களே இணைந்திருங்கள்
♣ பராஅத் இரவும், ஸுரா யாசீனின் சிறப்பும்
♣ நோன்பு பெருநாளில் தொழுகைக்கு முன் சாப்பிடுவது ஸுன்னத்
♣ திருமணதிற்காக பெண் பார்த்தல்
♣ தண்ணீரை வீண் விரயம் செய்யாதீர்கள்
♣ ஆயத்துல் குர்ஸியின் மகத்துவம்
♣ பாவங்கள் மன்னிக்கப்பட சூரா இக்லாஸ் ஓதுவோம்
♣ ஓதி பார்த்து தண்ணீர் தெளிக்கலாமா?
♣ மறுமையில் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை இலகுவாக கடக்க வேண்டுமா?
♣ பாவங்கள் மன்னிக்கப்பட ஓதவேண்டிய திக்ர்
♣ உணவு பாத்திரங்களை மூடி வைக்கவும்
♣ நோய் சுகமாக ஓதி பார்த்தல்
♣இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.
தமிழ் பகுதி → அல்ஹதீஸ்
அல் ஹதீஸ்
அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை குறிக்கும். அதாவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் செய்யும்படி கூறியவை, அன்னவர்கள் செய்தவை, அன்னர்வர்களின் சமூகத்தில் பிறர் செய்யும்போது அதனை அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.
அல் ஹதீஸ் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இரண்டாவதாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை, அல் குர்ஆனிற்கு விளக்க முறையாகவே இருந்தது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றாமல் மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாது.
உதாரணமாக - அல் குர்ஆனில் தொழுகையானது முஸ்லிம்களுக்கு கடமையென சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொழுகை முறைகள், தொழுகையில் ஓத வேண்டிய வசனங்கள், தொளுகையினால் கிடைக்ககூடிய நன்மைகள், விட்டால் கிடைக்கும் தண்டனைகள் எல்லாம் அல் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ளது. அல் குர்ஆனில் இவை பற்றி தனி தனியாக எதுவும் சொல்லப்பட்டு இல்லை. எனவே மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றல் மிக அத்தியாவசியமாகிறது.
அல் ஹதீஸ்கள் பிற்காலத்தில் வந்த இமாம்களால் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் மிகவும் ஆதாரப்பூர்வமானவை என முழு உலக முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை ஆறு கிரந்தங்களாகும். அவையாவன :
(a) ஸஹிஹ் அல் புகாரி
(b) ஸஹிஹ் முஸ்லிம்
(c) ஸுனன் அபுதாவூத்
(d) ஸுனன் அல் திர்மிதி
(e) ஸுனன் அல் நிஸாயீ
(f) ஸுனன் இப்னு மாஜா
ஆனாலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் வேறு பல ஹதீஸ் கிரந்தங்களிலும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முஸ்லிம் அறிஞர் பெரு மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
ஹதீஸ்கள் அவற்றின் நம்பகத்த்தன்மைக்கேற்ப ஸஹிஹ், ஹஸன், ழயீப், மவ்து என வைகைப்படுத்தப்பட்டுள்ளது.